வாழ்வே மாயம் – நீல வான

Posted: July 29, 2010 in Uncategorized
Tags:

படம் : வாழ்வே மாயம்
பாடல் : நீல வான
இசை : கங்கை அமரன்
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா

நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா
நான் வரைந்த பாடல்கள் நீலம் பூத்த கண்ணிலா
வராமல் வந்த என் தேவி

நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா

காளிதாசன் பாடினான் மேகதூதமே
தேவிதாசன் பாடுவான் காதல் கீதமே
இதழ்களில் தேன்துளி ஏந்திடும் பைங்கிளி
இதழ்களில் தேன்துளி ஏந்திடும் பைங்கிளி
நீ இல்லையேல் நான் இல்லையே ஊடல் ஏன் கூடும் நேரம்

நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா
நான் வரைந்த பாடல்கள் நீலம் பூத்த கண்ணிலா
வராமல் வந்த என் தேவி

நானும் நீயும் நாளைதான் மாலை சூடலாம்
வானம் பூமி யாவுமே வாழ்த்துப் பாடலாம்
விழியில் ஏன் கோபமோ விரகமோ தாபமோ
விழியில் ஏன் கோபமோ விரகமோ தாபமோ
ஸ்ரிதேவியே என் ஆவியே எங்கே நீ அங்கே நான்தான்

நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா
நான் வரைந்த பாடல்கள் நீலம் பூத்த கண்ணிலா
வராமல் வந்த என் தேவி

நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா

=====

Leave a comment